சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல்: 8 பேர் பலி

வடக்கு சிரியாவின் இரண்டு பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வடக்கு சிரியாவின் இரண்டு பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

சிரியாவின் அல்-பாப் நகரில் காவல்துறைத் தலைவரின் காரில் நடப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறை அதிகாரியும், இரண்டு காவலர்களும் பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர்.

அதேபோல் அஃப்ரின் நகரில், ஒரு பேக்கரி அருகே காரில் வெடிகுண்டு வெடித்ததில், மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.

2017 முதல் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து துருக்கியப் படைகள் கைப்பற்றியதில் இருந்து அல்-பாப்பில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com