தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

ஜெர்மனியில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிச.20 வரை நீட்டிப்பு

ஜெர்மனியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

News image

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல்

Updated On :26 நவம்பர் 2020, 10:37 am

ஜெர்மனியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக டிசம்பர் 20ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக அதிபர் ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பின் தாக்கம் குறைந்து வருகிறது. எனினும் கரோனா தொற்றின் இரண்டாம் அலைக்கு சாத்தியமிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜெர்மனியில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 20ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அதிபர் ஏஞ்சலா மெர்கல் புதன்கிழமை வெளியிட்டார்.

இதன்மூலம் வணிக வளாகங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களின் பணியாளர்களை அவர்களது இல்லங்களில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 18,633 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 9 லட்சத்து 61 ஆயிரத்து 320 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.