

ஜெர்மனியில் வியாழக்கிழமை நிலவரப்படி புதிதாக 6,638 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தினசரி பாதிப்பு தொடர்பாக ராபர்ட் கோச் நிறுவனம் (ஆர்.கே.ஐ) வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,638 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,41,223 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நோய்த் தொற்று பாதித்து 33 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு 9,710 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வைரஸ் தொற்று பாதித்து இதுவரை 2,81,000 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.