ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கரோனா

ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் கரோனா தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :17 அக்டோபர் 2020, 2:15 pm

ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் கரோனா தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆஸ்திரிய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அலெக்சாண்டர் ஷாலன்பெர்க். இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார். 

எனினும், அலெக்சாண்டருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் லக்சம்பர்க்கில் திங்களன்று நடந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றதன்மூலம் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். 

தொற்று உறுதியானதையடுத்து அலெக்சாண்டர் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். 8.8 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஆஸ்திரியாவில் இன்று மட்டும் 2,300 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கரோனாவுக்கு 882 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.