ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: 12 தலிபான்கள் பலி

ஆப்கனில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 தலிபான்கள் கொல்லப்பட்டனர். 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

ஆப்கனில் ராணுவத்தினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 தலிபான்கள் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்திற்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக சண்டை நடந்து வருகின்றன. இந்த நிலையில் க்ஹோ ஞானி மாகாணத்தின் தாண்டோ பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் நேற்றிரவு வான்வழியாக தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் 6 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 12 தலிபான் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த தாக்குதலின்போது 7 ரைபிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com