சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உத்தரப் பிரதேசத்தில் சாலை விபத்து: காவலர் பலி 

உத்தரப் பிரதேசத்தில் சீதாபூர் கிராமத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் காவலர் பலியாகியுள்ளார். 

News image
Police man killed as tractor hits bike in UP's Fatehpur
Updated On :29 அக்டோபர் 2020, 6:25 am

PTI

உத்தரப் பிரதேசத்தில் சீதாபூர் கிராமத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டர் மோதிய விபத்தில் காவலர் பலியாகியுள்ளார். 

தரியாவ் காவல் நிலையத்தின் கீழ் புதன்கிழமை மாலை நடந்த விபத்தில் காவலர் விஷால் யாதவ் (24) உயிரிழந்தார். டிராக்டரில் உள்ள வெளிச்சம் தரும் விளக்குகள் எரியாததே விபத்துக்குக் காரணம் என்று வட்ட அலுவலர் அனில் குமார் தெரிவித்தார்.

ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் பலத்த காயமடைந்த நிலையில் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்த யாதவின் குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குமார் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.