நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கலிபோர்னியாவை வெப்ப அலை தாக்கும்: காட்டுத் தீ ஏற்படும் அபாயம்

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் வெப்ப அலை தாக்கும் அபாயம் உள்ளதால் மேலும் சில பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image

கலிபோர்னியாவை வெப்ப அலை தாக்கும்: காட்டுத் தீ ஏற்படும் அபாயம்

Updated On :4 செப்டம்பர் 2020, 11:58 am IST

லாஸ்ஏஞ்சலிஸ்: கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் வெப்ப அலைத் தாக்கும் அபாயம் உள்ளதால் மேலும் சில பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கலிபோர்னியாவின் காட்டுப்பகுதிகளில் கடந்த மாத பிற்பாதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் ஏராளமான வனவிலங்குகள் பாதிக்கப்பட்டன. வனப்பகுதியையொட்டியிருந்த ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இதனிடையே தென்மேற்கு கலிபோர்னியாவில் கடுமையான வெப்பநிலை பதிவாக உள்ளதாக தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்துள்ளது. முன்பு இருந்ததை விட அதிக அளவிலான வெப்பநிலை பதிவாகும். இந்த வெப்பத்தால் உயிரிழப்புகளும் நிகழ வாய்ப்புள்ளது.

இதனால் வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடிய வயதில் இருக்கும் குழந்தைகள், முதியோர்கள் என அனைவரையும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு கடலோர பகுதிகளில் உள்ள கட்டடங்கள் வெப்பநிலையால் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த வெப்பநிலை செப்டம்பர் 7-ஆம் உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் செப்டம்பர் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.