பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,06,304-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 633 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதையடுத்து, நாட்டின் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,06,304-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, அந்த நோய்க்கு மேலும் 4 போ் பலியாகினா். இதன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 6,420-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அந்த நோயால் பாதிக்கப்பட்ட 2,92,869 போ் குணமடைந்துள்ளனா். 7,015 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வைரஸ் தொற்றுநோயைக் கண்டறிய இதுவரை 3,194,317 சோதனைகளை நடத்தியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.