ஸ்பெயின் பலி எண்ணிக்கை: தொடர்ந்து 4-வது நாளாக குறைவு
ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஒருநாளைக்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 4-வது நாளாக குறைந்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் முன்னணியில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 4 நாள்களாக அங்கு பலியாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 637 பேர் பலியாகியுள்ளனர். ஏறத்தாழ 2 வாரங்களில் 24 மணி நேரத்தில் பலியாவோரின் எண்ணிக்கையில் இதுவே குறைந்த எண்ணிக்கை.
மார்ச் 21-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் அங்கு பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரங்கள், இது குறைந்து வருவதையே காட்டுகிறது.
ஸ்பெயினில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டோர்: 1,35,032
பலியானோர்: 13,055
குணமடைந்தோர்: 40,437