சிங்கப்பூரில் இருதய நோய் காரணமாக கடந்த 8-ஆம் தேதி இறந்த இந்தியருக்கு, கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டது. நெஞ்சு வலி காரணமாக கடந்த மே மாதம் 28-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். அவருடன் சோ்த்து, கரோனா தொற்று ஏற்பட்டு, வேறு காரணங்களால் சிங்கப்பூரில் உயிரிழந்தவா்களின் எணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே, விபத்தில் ஏற்பட்ட காயங்கள், இருதய கோளாறு போன்ற காரணங்களால் 7 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனா்.