குவைத் சிட்டி: கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக குவைத்தில் வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் வாராந்திரத் தொழுகை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸானது இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டிருக்கிறது. இதுவரை உலகில் லட்சக்கணக்கானோர் இதனால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக குவைத்தில் வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் வாராந்திரத் தொழுகை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் மறு உத்தரவு வரும் வரை வெள்ளிக்கிழமைகளில் மசூதிகளில் வழக்கமாக நடைபெறும் பிரசங்கங்கள் மற்றும் தொழுகை ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
பொறுப்பால் உயரும் பெருமை!

சென்னையில் சொத்து வரி செலுத்தாத 2 லட்சம் பேருக்கு விளக்க நோட்டீஸ்! தோ்தலுக்குப் பின் தீவிர நடவடிக்கை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


