நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாகிஸ்தானில் 90% பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர்

பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் பேர் சிகிச்சை பெற்று தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 

News image

கோப்புப்படம்

Updated On :26 அக்டோபர் 2020, 11:05 am

DIN

பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் பேர் சிகிச்சை பெற்று தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 707 பேருக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 328,602 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் கரோனா தொற்றுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 6,739 ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பெற்று இதுவரை 311,075 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10,788 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 26,492 உள்பட இதுவரை 42,90,545 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் சிந்து முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து பஞ்சாப், கைபர்-பக்துன்க்வா மாகாணங்கள் இடம்பெற்றுள்ளன.

மாகாண வாரியாக பாதிப்பு விவரங்கள்:

சிந்து - 143,836, பஞ்சாப் - 102,875, கைபர்-பக்துன்க்வா- 39,043, இஸ்லாமாபாத் - 19,012, பலுசிஸ்தான்- 15,810, கில்கித்-பல்திஸ்தான்- 4,180 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 3,846 பேர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.