தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச்சுற்றியுள்ள மூன்று பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது ஜப்பான் அரசு. 

Updated On :8 ஜனவரி 2021, 3:26 pm IST


டோக்கியோ: கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச்சுற்றியுள்ள மூன்று பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது ஜப்பான் அரசு. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து தொற்று பரவலை தடுக்க, தேசிய அரவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் அறிவித்துள்ளார். 

பிப்ரவரி 7 ஆம் தேதி வரை, மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், ஷாப்பிங் மால்கள் மற்றும் பள்ளிகள் திறந்திருக்கும். திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறும், மக்கள் கூட்டமாக கூடக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் உணவகங்கள், பார்களை இரவு 8 மணிக்குள் மூடும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.