தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை

பறவைக் காய்ச்சல் அச்சத்தால் இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.

News image

இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை

Updated On :8 ஜனவரி 2021, 2:52 pm IST


காத்மாண்டு: பறவைக் காய்ச்சல் அச்சத்தால் இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.

இந்தியாவிலிருந்து கோழி உள்ளிட்ட பண்ணைப் பொருள்கள் அனைத்தின் இறக்குமதியையும் நிறுத்தி வைத்து நேபாளம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விதமான பண்ணைப் பொருள்களையும் எல்லையிலேயே நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு நேபாளத்தின் வேளாண் மற்றும் கால்நடைகள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், நேபாளம் - இந்தியா எல்லைப் பகுதியில் திறந்தவெளியில் பண்ணைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதையும் நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.