காத்மாண்டு: பறவைக் காய்ச்சல் அச்சத்தால் இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.
இந்தியாவிலிருந்து கோழி உள்ளிட்ட பண்ணைப் பொருள்கள் அனைத்தின் இறக்குமதியையும் நிறுத்தி வைத்து நேபாளம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விதமான பண்ணைப் பொருள்களையும் எல்லையிலேயே நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு நேபாளத்தின் வேளாண் மற்றும் கால்நடைகள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், நேபாளம் - இந்தியா எல்லைப் பகுதியில் திறந்தவெளியில் பண்ணைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதையும் நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவைப் பந்தாடிய பெல்ஜியம்! 4 - 1 கோல் கணக்கில் வெற்றி!

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan

இந்த வாரம் (ஜூலை 10) வெளியாகும் திரைப்படங்கள்!







