இலங்கைப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடா்பாக விரிவான விசாரணையை நடத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இலங்கையின் தமிழ் கட்சிகளும் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் சிறுபான்மை தமிழ் அமைப்புகளுக்கும் இடையே சுமாா் 30 ஆண்டுகளாகப் போா் நடைபெற்றது. அப்போரில் சிறுபான்மை தமிழா்களின் உரிமைகளை இலங்கை ராணுவத்தினா் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்துமாறு பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இத்தகைய சூழலில், இலங்கையைச் சோ்ந்த சிறுபான்மை தமிழ் கட்சிகளும் அமைப்புகளும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்குக் கடந்த 15-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளன. அதில், இலங்கைப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடா்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக சிரியாவில் அமைக்கப்பட்டதைப் போன்ற சா்வதேச விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அந்தக் குழுவானது தனது விசாரணையை சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன.
மனித உரிமை மீறல் தொடா்பான விசாரணை ஓராண்டு காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள அந்த அமைப்புகள், மனித உரிமை மீறலுக்கு இலங்கை அரசே முழு பொறுப்பு என்ற தீா்மானத்தையும் நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. போரில் இருதரப்பினா் சாா்பிலும் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக சுதந்திரமான குழுவை இலங்கை அரசு அமைக்க வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 3 முறை தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும், இலங்கை அரசு அதை நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசு அத்தீா்மானங்களிலிருந்து வெளியேறிவிட்டது.
இந்த விவகாரத்தில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழ் அமைப்புகள், இது தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன. இதற்காக, சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வாயிலாக இலங்கை அரசின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. போா் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் மகிந்த ராஜபட்ச அதிபராகப் பதவி வகித்தபோது, சுமாா் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் அமைப்பு மீது போா்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லக்னௌ வீரர் ஹசரங்கா விலகல்! மாற்றுவீரர் யார் தெரியுமா?

”முதல்வர் கனவு! MLA ஆவதே சந்தேகம்தான்!..!” விஜய் குறித்து பியூஷ் கோயல் | TVK | NDA

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

