சீனாவில் மீன்பிடி படகு மூழ்கியத்தில் 12 பேர் பலியானார்கள்.
சீனாவின் கிழக்கு பகுதியான செஜியாங் மாகாணத்தில் 20 பேருடன் சென்ற மீன்பிடி படகு இன்று திடீரென மூழ்கியது. தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் 4 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் 4 பேர் மாயமாகினர்.
எனினும இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள். மீன்பிடி படகு விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.