6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளத்திற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிய இந்தியா

இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக நேபாளம் நாட்டிற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்திய அரசின் சார்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

News image
நேபாளத்திற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கிய இந்தியா
Updated On :22 ஏப்ரல் 2021, 10:18 am

DIN

இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக நேபாளம் நாட்டிற்கு 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்திய அரசின் சார்பில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கரோனா தொற்று நோய்க்கு எதிரான நேபாளத்தின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக இந்திய அரசின் சார்பில்  வெண்டிலேட்டர்கள், அவசர மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட 39 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காத்மாண்டுவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் 39 ஆம்புலன்ஸ் வாகனங்களையும், 6 பள்ளி வாகனங்களையும் நேபாள அதிகாரிகளிடம் வழங்கினர்.

முன்னதாக கடந்த ஆண்டு மகாத்மா காந்தியின் 151ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 41 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் ஆறு பள்ளி பேருந்துகளை நேபாளத்திற்கு இந்தியா வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.