47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனாவுக்கு பிந்தைய பிரச்னைகள்..உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கரோனாவிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்னைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :5 ஆகஸ்ட் 2021, 11:55 am

DIN

கரோனாவிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல்நல பிரச்னைகள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவகும் கிட்டத்தட்ட 20 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏற்படும் தாக்கம் உடல் அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்திவரும் நிலையில், கரோனாவிலிருந்து மீண்ட பிறகு எழும் பிரச்னைகள் எண்ணில் அடங்காவையாக உள்ளன.

கரோனாவிலிருந்து மீண்ட பிறகு எழும் உடல் நில பிரச்னைகளால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த விவரங்கள் தங்களிடம் இல்லை என்றும் ஆனால் இது கவலை அளிக்கும் விதமாக உள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தொழில்நுட்பப்பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், "இம்மாதிரியான நீண்ட கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மருத்துவ உதவி பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு நாள்கள் வரை இப்பிரச்னைகள் நீள்கிறது என எங்களுக்கு தெரியாது. இதுகுறித்து மேலும் புரிந்து கொள்ள இதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளோம்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.