கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 

கரோனாவின் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்திலும்  அதிகரித்து வருகிறது.

News image

நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 

Updated On :7 ஆகஸ்ட் 2021, 10:56 am

கரோனாவின் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்திலும்  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேபாளத்தில்   இதுவரை கரோனாவால் 10,019 பேர்  உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேர் புதிதாக தொற்றில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும்  அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்திருக்கிறது.

கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து தற்போது வரை  7.10 லட்சம் பேர்  பாதிப்படைந்திருப்பதாகவும் அதில் 34,942 சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியா ,சீனா , அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து கரோனா  தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நேபாளம் இதுவரை 44.5 லட்சம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி வழங்கியிருக்கிறார்கள். 

இதற்கிடையில் தொற்று பரவலை அரசு கையாண்ட விதத்தை மருத்துவ வல்லுநர்கள் விமர்சித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.