நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 

கரோனாவின் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்திலும்  அதிகரித்து வருகிறது.
நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 
நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 
Updated on
1 min read

கரோனாவின் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்திலும்  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேபாளத்தில்   இதுவரை கரோனாவால் 10,019 பேர்  உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேர் புதிதாக தொற்றில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும்  அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்திருக்கிறது.

கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து தற்போது வரை  7.10 லட்சம் பேர்  பாதிப்படைந்திருப்பதாகவும் அதில் 34,942 சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியா ,சீனா , அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து கரோனா  தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நேபாளம் இதுவரை 44.5 லட்சம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி வழங்கியிருக்கிறார்கள். 

இதற்கிடையில் தொற்று பரவலை அரசு கையாண்ட விதத்தை மருத்துவ வல்லுநர்கள் விமர்சித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com