6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 

கரோனாவின் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்திலும்  அதிகரித்து வருகிறது.

News image
நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 
Updated On :7 ஆகஸ்ட் 2021, 10:56 am

DIN

கரோனாவின் தாக்கம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்திலும்  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேபாளத்தில்   இதுவரை கரோனாவால் 10,019 பேர்  உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 2,430 பேர் புதிதாக தொற்றில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும்  அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம்  தெரிவித்திருக்கிறது.

கரோனா தொற்று தொடங்கியதில் இருந்து தற்போது வரை  7.10 லட்சம் பேர்  பாதிப்படைந்திருப்பதாகவும் அதில் 34,942 சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தியா ,சீனா , அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து கரோனா  தடுப்பூசிகளை இறக்குமதி செய்த நேபாளம் இதுவரை 44.5 லட்சம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி வழங்கியிருக்கிறார்கள். 

இதற்கிடையில் தொற்று பரவலை அரசு கையாண்ட விதத்தை மருத்துவ வல்லுநர்கள் விமர்சித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.