கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளித்த எம்.ஐ.35  ஹெலிகாப்டரை கைப்பற்றிய தலிபான்கள்  

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் தலிபான்களின் ஆதிக்கமே அதிகரித்து வருகிறது. ஆப்கனின் 65% நிலப்பகுதிகளை கைப்பற்றிய  தலிபான்கள் தற்போது காபூலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்

News image

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அளித்த எம்.ஐ.35  ஹெலிகாப்டரை கைப்பற்றிய தலிபான்கள்  

Updated On :12 ஆகஸ்ட் 2021, 11:31 am

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில் தலிபான்களின் ஆதிக்கமே அதிகரித்து வருகிறது. ஆப்கனின் 65% நிலப்பகுதிகளை கைப்பற்றிய  தலிபான்கள் தற்போது காபூலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள். இதே நிலை நீடித்தால் இன்னும் 90 நாட்களில் ஆப்கானிஸ்தான் முற்றிலும் தலிபான்களிடம் சரணடையும் என அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) ஆப்கனின்  குந்துஸ் விமானப்படை தளத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் அங்கிருந்த எம்.ஐ ரக போர் ஹெலிகாப்டரையும் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.

பெலாரஸ் - ஆப்கானிஸ்தான் ஒப்பந்தத்தின் படி  2019-ம் ஆண்டு 4 எம்ஐ-35 ரக ஹெலிகாப்டர்களைப் பரிசாக இந்தியா வழங்கியது. அதன் பராமரிப்புச் செலவுகளை ஆப்கன் அரசே மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது  தலிபான்களிடம் சிக்கியிருக்கிறது.

நான்கு ஹெலிகாப்டரில் ஒன்று மட்டுமே தலிபான்கள் பிடியில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.