ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து நடத்திய தாக்குதல்களில் 439 தலிபான்கள் பலியானார்கள் என்றும் 77 பேர் காயமடைந்தார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆப்கனின் முக்கியப் பகுதிகளான நன்கர்கர், லெஹ்மன், லோகர், பக்ஷியா , உருஸ்கன், சாபுல் , கோர் , பரஹ் போன்ற பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலில் தலிபான்களைக் கொன்றதோடு சில இடங்களை ராணுவம் மீட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிக்க | காஷ்மீர் : தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் பறிமுதல்
இந்நிலையில் , வன்முறைகளுக்கு இடையில் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மசர்-இ-ஷெரீப் நகருக்கு வந்தடைந்தார். வருகைக்கான காரணமாக தொடர்ந்து தலிபான்கள் ஆப்கன் பகுதிகளை கைப்பற்றி வருவதால் தாக்குதல்களுக்கிடையே குந்தூஸ் , லக்ஷர் , கந்தஹார் மற்றும் சில பகுதிகளைச் சுற்றி இருக்கும் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியானதால் அதிபர் பேச்சுவார்த்தைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அமெரிக்கா உளவு நிறுவனம் ஒன்று , இன்னும் மூன்று மாதத்தில் தலிபான்கள் ஆப்கனின் தலை நகரான காபூலை கைப்பற்றிவிடுவார்கள் என்றும் அமெரிக்க படைகள் வெளியேறியதனால் தான் முன் எப்போதும் இல்லாத பின்னடைவை ஆப்கன் அரசு சந்தித்து வருகிறது என தெரிவித்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


