புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சிறார்களுக்கு அக்டோபர் மாதத்திலிருந்து கரோனா தடுப்பூசி

அக்டோபர் மாதத்திலிருந்து சிறார்களுக்கு சைடஸ் கேடிலா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசின் கரோனா குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:49 am

DIN

அக்டோபர் மாதத்திலிருந்து சிறார்களுக்கு சைடஸ் கேடிலா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசின் கரோனா குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.

மருத்துவ குறைபாடுள்ள சிறார்களுக்கு முன்னுரிமை, 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளின் விவரம் உள்ளிட்டவை அக்டோபர் மாதம் சைடஸ் கேடிலா தடுப்பூசி விநியோகிப்பதற்கு முன்பு வெளியிடப்படும் என அரசின் கரோனா குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார். 

நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவரான அரோரா இதுகுறித்து மேலும் கூறுகையில், "குழுந்தைகள் கரோனாவால் பாதிக்கப்படுவதற்கு குறைவான சாத்தியக்கூறுகளே உள்ளன என சமீபத்திய செரோ சர்வேயில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, மீண்டும் பள்ளிகளை திறக்கலாம்.

இந்தியாவில் 12 முதல் 18 வயது வரையிலான சிறார்கள் 12 கோடி பேர் உள்ளனர் எனக் கணிக்கிடப்பட்டுள்ளது. அதில், 1 சதவிகித்திற்கும் குறைவானவர்களுக்கு உடல்நலை குறைபாடுள்ளது. எனவே, கரோனாவால் அவர்களின் உடல் நிலை தீவிரமாக பாதிக்கப்படுவதற்கும் இறப்பு நிகழ்வதற்கு குறைவான சாத்தியக்கூறுகளே உள்ளன. 

அதற்கு நேர்மாறாக, 18 முதல் 45 வயது வரை இருக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கு கரோனாவால் தீவிரமான உடல்நல குறைவு ஏற்படுவதற்கு 10 முதல் 15 மடங்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பு இந்த வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே எங்களுக்கு முன்னுரிமை.

அக்டோபர் மாதத்திலிருந்து சிறார்களுக்கு சைடஸ் கேடிலா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசின் கரோனா குழு தலைவர் என்.கே. அரோரா தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லலாம். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான தேவை தற்போது இல்லை. ஆனால், அவர்களை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது அவசியம். பெற்றோர்கள் மற்றும் பள்ளி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.