கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகரிப்பு: கவலை தரும் தென்னாப்ரிக்க நிலைமை

ஒமைக்ரான் எனப்படும் பல மடங்கு உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்ரிக்காவில், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும், தினசரி கரோனா பாதிப்பும் அதிகரித்திருப்பது கவலைத

News image

குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகரிப்பு: கவலை தரும் தென்னாப்ரிக்க நிலைமை

Updated On :4 டிசம்பர் 2021, 12:17 pm


ஜோஹன்னஸ்பர்க்: ஒமைக்ரான் எனப்படும் பல மடங்கு உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்ரிக்காவில், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும், தினசரி கரோனா பாதிப்பும் அதிகரித்திருப்பது கவலைதருவதாக உள்ளது.

வெள்ளிக்கிழமை, தென்னாப்ரிக்காவில் புதிதாக 16,055 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 25 பேர் பலியாகினர்.

கடந்த கால கரோனா பேரிடர்களின்போது, பொதுவாகவே குழந்தைகளுக்கு அதிகமாக கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதுபோலவே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவும் அதிகரிக்கவில்லை. ஆனால், தற்போதைய கரோனா அலையில், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கும், 15 முதல் 19 வயதுடைய இளைஞர்களுக்கும் அதிகமாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது, நான்காவது அலை உருவாகுமோ என்ற நிலையில், அனைத்து தரப்பு வயதினருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு என்று தேசிய தொற்றுநோய் மையத்தின் மருத்துவர் வாஸிலா ஜஸ்ஸத் தெரிவித்துள்ளார்.

தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோரில் மிக அதிகமாக இருப்பது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளே, அடுத்தபடியாகத்தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

இதுவரை நாம் பார்த்த காட்சிகளுக்கு நேரெதிரான நிலை தற்போது உருவாகியுள்ளது. இதுபோன்ற நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அடுத்த அலையின் ஆரம்பத்தில் தற்போது இருக்கிறோம். தற்போதைய நிலையில், குழந்தைகளுக்கான மருத்துவமனையில் படுக்கைகளை அதிகரிப்பது மற்றும் ஊழியர்களை அதிகரிப்பதுதான் அவசியம் என்று தெரிகிறது என்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.