கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அமெரிக்காவை புரட்டிப் போட்ட சூறாவளி: பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

அமெரிக்காவின் கென்டகி உள்ளிட்ட 5 மாகாணங்களில் வெள்ளிக்கிழமை தாக்கிய சூறவாளியால் பலியானவர்களின் எண்ணிக்கை 74ஆக  உயர்ந்துள்ளது.

News image
அமெரிக்காவை புரட்டிப் போட்ட சூறாவளி: பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு
Updated On :28 ஜனவரி 2024, 5:41 am

DIN

அமெரிக்காவின் கென்டகி உள்ளிட்ட 5 மாகாணங்களில் வெள்ளிக்கிழமை தாக்கிய சூறவாளியால் பலியானவர்களின் எண்ணிக்கை 74ஆக  உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் கென்டகி, இல்லினாய்ஸ், அர்கன்சாஸ் உள்ளிட்ட 5 மாகாணங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சூறாவளி தாக்கியது. இதனால் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் இடிந்து விழுந்தன.

கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுவரை 74 பேர் சூறாவளியால் பலியாகியுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் மாயமான 100க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சூறாவளி தாக்கிய நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின்சார இணைப்புகள் சேதமடைந்துள்ளன. சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை நேரில் பார்வையிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.