கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

‘மக்களைப் பிரிக்காத பிரதமரே தேவை’: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கருத்து

தேர்தல்கள் மூலம் மக்களைப் பிரிக்காமல் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்தும் செல்லும் பிரதமரே தேவை என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News image

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா

Updated On :14 டிசம்பர் 2021, 10:03 am

தேர்தல்கள் மூலம் மக்களைப் பிரிக்காமல் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்தும் செல்லும் பிரதமரே தேவை என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகெளடா வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பரூக் அப்துல்லா, “அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துச் செல்லும் பிரதமரே நமக்கு தேவை. தங்களது அரசியலுக்காக மக்களை பிரிக்கும் வகையிலேயே தேர்தல் தற்போது நடந்து வருகிறது.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவிற்கு பிரிவினைவாதம் தேவையில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் இந்தியர்களும், இந்தியாவும் பிரிக்கப்பட்டு வருகிறது. மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்கும் அரசியல் முடிவுக்கு வரும் காலம் தூரமில்லை” என பரூக் அப்துல்லா குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.