வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல்லின் 10 ஆம் ஆண்டு நினைவை போற்றும் விதமாக வடகொரிய மக்கள் சிரிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
வடகொரியாவின் தற்போதைய அதிபரான கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், அவருடைய 10-வது ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக வடகொரியாவில் உள்ள பொதுமக்கள் இன்றிலிருந்து 11 நாள்கள் சிரிக்கவோ , கொண்டாட்டங்களில் ஈடுபடவோ , மது குடிக்கவோ கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருக்கிறது.
முன்னதாக , இந்தாண்டு தொடக்கத்தில் தன்னைப் போல் யாரும் சிகை அலங்காரம் வைக்கக் கூடாது, மெலிதான ஜீன்ஸ் அணியக் கூடாது எனக் கூறிய கிம் ஜாங் உன் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டதும் இணையத்தில் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.