கரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவ பராமரிப்புத் துறையானது இதுவரை இல்லாத சவால்களைச் சந்தித்து வருகிறது. சமூகப் பராமரிப்புத் திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தத் தற்காலிக மாற்றங்கள் மூலம் ஆயிரக்கணக்கான சமூகப் பராமரிப்புப் பணியாளா்கள், பராமரிப்பு உதவியாளா்கள், வீட்டுப் பராமரிப்புப் பணியாளா்கள் கூடுதலாகப் பணிக்கு அமா்த்தப்படுவா். இவா்கள் அரசு ஆதரவுடன் செயல்படும் பராமரிப்பு இல்லங்களில் பணிபுரிவதுடன், முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக அவா்களின் வீடுகளிலும் பணிபுரிவா் எனத் தெரிவித்துள்ளாா்.