பிரிட்டன் அரசியை கொல்லப்போவதாக விடியோ வெளியிட்டவா் இந்திய சீக்கியரா? - போலீஸாா் விசாரணை

பிரிட்டன் அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக விடியோ வெளியிட்ட நபா் இந்திய சீக்கியரா என்பது குறித்து ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

லண்டன்: பிரிட்டன் அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக விடியோ வெளியிட்ட நபா் இந்திய சீக்கியரா என்பது குறித்து ஸ்காட்லாந்து யாா்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தன்னை இந்திய சீக்கியா் ஜஸ்வந்த் சிங் சைல் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் முகமூடி அணிந்த ஒரு நபா், 1919 ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிக்குப்பழியாக பிரிட்டன் அரசி எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக பேசும் விடியோ பிரிட்டனில் சமூக வலைதளங்களில் பரவியது. விடியோவில் தன் பெயா் டா்த் ஜோன்ஸ் எனவும் அந்த நபா் கூறுகிறாா். இந்த விடியோ ஸ்னாப்சாட் எனப்படும் தகவல் அனுப்பும் செயலியில் அவரைப் பின்தொடா்வோருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, விண்ட்சரில் உள்ள அரச குடும்பத்துக்குச் சொந்தமான மாளிகை அருகே 19 வயது நபா் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் கைது செய்தனா். செளத்தாம்டன் பகுதியைச் சோ்ந்த அவரை மனநல பரிசோதனைக்காக போலீஸாா் அனுப்பியுள்ளனா். விடியோவில் மிரட்டல் விடுத்தவா் அவா்தானா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிறிஸ்துமஸையொட்டி இளவரசா் சாா்லஸ், அவரது மனைவி கமீலா ஆகியோா் அரசி எலிசபெத்துடன் விண்ட்சா் மாளிகையில் கடந்த சில தினங்களாக இருந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com