மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உகாண்டாவில் கையெறி குண்டு வெடித்து 4 சிறுவர்கள் பலி

உகாண்டாவில் கையெறி குண்டு வெடித்ததில் 4 சிறுவர்கள் பலியானார்கள். 

News image
Updated On :18 பிப்ரவரி 2021, 10:57 am

உகாண்டாவில் கையெறி குண்டு வெடித்ததில் 4 சிறுவர்கள் பலியானார்கள். 
உகாண்டா நாட்டில் அட்ஜுமனி மாவட்டத்தில் புதரில் கிடந்த கையெறி குண்டு ஒன்றை சிறுவர்கள் சிலர் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்த குண்டை பெரிய கத்தியை கொண்டு வெட்டியுள்ளனர். 
அப்போது அந்த குண்டு எதிர்பாராதவிதமாக வெடித்தது. இந்த சம்பவத்தில் 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அந்த சிறுவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 
அவர்களில் சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் இறந்தான். இதையடுத்து இந்த விபத்தில் மொத்தம் 4 சிறுவர்கள் பலியானார்கள். விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.