6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாலத்தீவுகளுக்கு மேலும் 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா

மாலத்தீவுகளுக்கு கூடுதலாக மேலும் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

News image
மாலத்தீவுகளுக்கு மேலும் 1 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வழங்கிய இந்தியா
Updated On :20 பிப்ரவரி 2021, 12:01 pm

DIN

மாலத்தீவுகளுக்கு கூடுதலாக மேலும் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியுள்ளது.

பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழலில் சீரம் மையத்தால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் தடுப்பூசிகளை மாலத்தீவுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு வழங்கியது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலத்தீவுகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் இருதரப்பு உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 1 லட்சம் கரோனா தடுப்பூசிகளை மாலத்தீவுகளின் நிதியமைச்சர் அப்துல் ஷாஹ் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கெர்பான்சிம்
ஆகியோரிடம் அவர் வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.