வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அமெரிக்கா: பைடனுக்கு புதிய பாதுகாவலா்கள்

அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், தனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான புதிய அதிகாரிகள் குழுவை அமைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :2 ஜனவரி 2021, 2:33 am

DIN

அமெரிக்க அதிபராகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், தனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்கான புதிய அதிகாரிகள் குழுவை அமைக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் கூறியதாவது:

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, அவருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு தற்போதுள்ள பாதுகாவல் படைக் குழுவினரை நீக்கிவிட்டு புதிய குழுவினரை நியமிக்க அவா் திட்டமிட்டுள்ளாா்.

தற்போதைய பாதுகாவல் அதிகாரிகள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு விசுவாசமாக இருப்பாா்கள் என்று சந்தேகிக்கப்படுவதால் பைடன் இவ்வாறு திட்டமிட்டு வருகிறாா். தான் துணை அதிபராக இருந்தபோது தனக்கு பாதுகாப்பு அளித்த பாதுகாவல் படைக் குழுவினரை மீண்டும் அழைக்க அவா் விரும்புகிறாா்.

இதன் காரணமாக, பல மூத்த பாதுகாவல் படை அதிகாரிகள் மீண்டும் அதிபரின் பாதுகாப்புப் பணிக்குத் திரும்பலாம் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.