உணவகங்கள், திரையரங்குகள் மூடியேயிருக்கும்; பிரான்ஸில் தீவிரமெடுக்கும் கரோனா பாதிப்பு

பிரான்ஸில் கரோனா பாதிப்பு தீவிரமெடுக்கும் நிலையில், பிரிட்டன் மற்றும் தென்னாப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா பாதிப்பும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
உணவகங்கள், திரையரங்குகள் மூடியேயிருக்கும்; பிரான்ஸில் தீவிரமெடுக்கும் கரோனா பாதிப்பு
உணவகங்கள், திரையரங்குகள் மூடியேயிருக்கும்; பிரான்ஸில் தீவிரமெடுக்கும் கரோனா பாதிப்பு
Updated on
1 min read


பாரீஸ்: பிரான்ஸில் கரோனா பாதிப்பு தீவிரமெடுக்கும் நிலையில், பிரிட்டன் மற்றும் தென்னாப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா பாதிப்பும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதனால், ஜனவரி மாதம் வரை உணவகங்கள், மதுபானக் கூடங்கள், திரையரங்குகள் எதுவும் திறக்கப்பட மாட்டாது என்று பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.

தற்போது பிரான்ஸில் நிலைமை மோசமடைந்துள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்பும் சூழ்நிலை வெகுதொலைவில் உள்ளது. தொடர்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது, டிசம்பர் மாத மத்தியில் இருந்து தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 10 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது அதுவே 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளில் பாதிக்கம் மேல் கரோனா நோயாளிகளால் நிரப்பப்பட்டுள்ளது.

தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்ட அதிதீவிர கரோனா பாதித்தோர் எண்ணிக்கை தற்போது மூன்றாக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com