தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தலிபான் தாக்குதலில் 6 ஆப்கன் படையினர் பலி

ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடியில் தலிபான் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 5 ஆப்கன் படை வீரர்களும், ஒரு படைப்பிரிவு தலைவரும் பலியாகினர்.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஜனவரி 2021, 11:44 am

DIN

ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடியில் தலிபான் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 5 ஆப்கன் படை வீரர்களும், ஒரு படைப்பிரிவு தலைவரும் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் தர்காட் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு தலிபான்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஆப்கானிஸ்தானின் படைப்பிரிவைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்களும், 6 ஆவது பட்டாலியனின் 2 ஆவது படைப்பிரிவு தலைவர் சுல்தான் முகமதுவும் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.