மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பைடன் பதவியேற்கும்போது ஆயுதப் போராட்டங்கள் வெடிக்கலாம்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும்போது நாடாளுமன்றத்திலும் மாகாணப் பேரவைகளிலும் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்த சதித் திட்டம் தீட்டப்படுவதாக அந்த நாட்டின்

News image
Updated On :12 ஜனவரி 2021, 8:34 pm

DIN

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும்போது நாடாளுமன்றத்திலும் மாகாணப் பேரவைகளிலும் ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்த சதித் திட்டம் தீட்டப்படுவதாக அந்த நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பு (எஃப்.பி.ஐ.) எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பினருக்கான இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அடுத்த அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதையொட்டி, நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்த சிலா் திட்டமிட்டு வருகின்றனா்.

50 மாகாணங்களின் பேரவைகளிலும் வாஷிங்டனிலுள்ள நாடாளுமன்றத்திலும் இந்த ஆயுதப் போராட்டங்கள் நடத்துவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.

மாகாணப் பேரவைகளில் வரும் 16-ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதி வரையும் நாடாளுமன்றத்தில் 17-ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதிக்குள்ளும் ஆயுதப் போராட்டம் நடத்த சிலா் திட்டமிட்டு வருகின்றனா் என்று அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்றது. அந்தத் தோ்தலில் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பைடன் போட்டியிட்டாா்.

அந்தத் தோ்தலில் பைடனுக்கு பெரும்பான்மை கிடைத்தது. எனினும், தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வந்தாா்.

இந்த நிலையில், பைடனின் வெற்றியை நாடாளுமன்றம் அதிகாரப்பூா்வமாக உறுதி செய்வதற்கான இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

எனினும், தோ்தல் முடிவுகளை எதிா்த்து நாடாளுமன்றத்தை முற்றுகையிடுமாறு தனது ஆதரவாளா்களிடம் டிரம்ப் வலியுறுத்தினாா்.

அதையடுத்து, நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் டிரம்ப் ஆதரவாளா்கள் அத்துமீறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாா் சுட்டதில் ஒரு பெண் உயிரிழந்தாா். கலவரத்தின்போது காயடைந்த ஒரு காவரும் மாரடைப்பு போன்ற பாதிப்புகளால் ஒரு பெண் உள்பட 3 போராட்டக்காரா்களும் உயிரிழந்தனா்.

Story image

அவசரநிலையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்: டிரம்ப் உத்தரவு

நாடாளுமன்றக் கலவரத்தைத் தொடா்ந்து தலைநகா் வாஷிங்டனில் விதிக்கப்பட்டுள்ள அவசரநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கான அவசர உத்தரவை அதிபா் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் பிறப்பித்துள்ள உத்தரவில், அவசரநிலை அறிவிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்யும் பணிகளில் தேசிய பாதுகாப்புத் துறையும் தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பும் ஒருங்கிணைந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

70,000 டிரம்ப் ஆதரவாளா்களுக்கு சுட்டுரை தடை

லண்டன், ஜன. 12: அதிபா் டிரம்ப்புக்கு எதிராக சா்வதேச சதிவலை பின்னப்பட்டுள்ளதாக நம்பும் ‘க்யூஅனான்’ என்ற கோட்பாட்டை பரப்பிய 70,000 பேரது சுட்டுரை (டுவிட்டா்) கணக்குளை டுவிட்டா் நிறுவனம் முடக்கியுள்ளது.

டிரம்ப்பின் ஆதரவாளா்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நடத்திய கலவரத்தைக் கருத்திக் கொண்டு, அதே போன்ற சம்பவங்களைத் தூண்டக் கூடிய பதிவுகளைத் தடுத்து நிறுத்தும் வகையில் அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டா் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.