உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9 கோடியே 35 லட்சத்து 9 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கரோனா நோய்த்தொற்று, தற்போது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,35,09,784 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 20,01,289 போ் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,67,98,666 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,47,09,829 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,11,882 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,38,48,410 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 3,97,994 ஆக உயர்ந்துள்ளது.
2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 10,528,508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,51,954 பேர் உயிரிழந்துள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,26,115 ஆக உயர்ந்துள்ளதோடு, 2,07,160-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 73,39,703 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.