தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 13 காவலர்கள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 13 பேர் பலியாகியுள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :16 ஜனவரி 2021, 1:12 pm

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 13 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஊடுருவிய தலிபான் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். 

மேலும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தலிபான்கள் காவலர்களின் ஆயுதங்களையும் கைப்பற்றி சென்றனர். 

ஹெராத் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.