கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பிரேசிலில் அதிகரிக்கும் கரோனா பலி: கடந்த 24 மணி நேரத்தில் 1,340 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,340 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

News image

Brazil's Covid-19 death toll tops 1,82,000

Updated On :21 ஜனவரி 2021, 6:02 am

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,340 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இது ஆகஸ்ட் 19, 2020-க்குப் பிறகு இரண்டாவது நாளாக அதிக பலி எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டு சுகாதார அமைப்பு இன்று வெளியிட்டுள்ள தகவலில்,

நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 2,12,831 ஆக பதிவாகியுள்ளது. இது அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 64,385 பேருக்கு தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 8,638,249 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இந்தியாவிற்கு அடுத்தபடியாக பாதிப்பில் உலகின் மூன்றாவது இடத்தில் பிரேசில் உள்ளது. 

அதேநேரத்தில் தொற்று பாதித்த 75,64,622 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். மேலும் 8,62,353 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.