48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

பிரிட்டனில் கட்டுக்குள் அடங்காத கரோனா பரவல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

பிரிட்டனில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஜனவரி 2021, 12:57 pm

பிரிட்டனில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவல் காரணமாக கடுமையான புதிய விதிகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க விதிமுறைகளுக்கு இணையாக புதிய கட்டுப்பாடுகள் பிரிட்டனில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 18ஆம் தேதி முதல் பிரிட்டன் நாட்டின் எல்லைகள் மூடப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார்.

70 சதவீதம் வரை பரவும் தன்மை அதிகரித்துள்ள புதிய வகை கரோனா நாட்டில் பரவி வருவதைத் தொடா்ந்து இநதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் தொற்றுபாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.

கடந்த 28 நாள்களில் கரோனா தொற்றால் 1,820 பேர் பலியாகியுள்ளதாக புதன்கிழமை தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா இறப்புகள் எதிர்வரும் காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.