இலங்கையில் 55 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
இலங்கையில் 55 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் இரண்டாம் அலை அண்டை நாடான இலங்கையிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 700 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,189ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவிலிருந்து இதுவரை 47,215 பேர் குணமடைந்துள்ளனர். 
தற்போதைய நிலைவரப்படி 7,700 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கரோனாவுக்கு இதுவரை 274 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com