துபை: துபையில் இந்திய தம்பதியர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தொழிலாளியால் கொலை செய்யப்பட்ட வழக்கில், தம்பதியரின் இரண்டு மகள்களும், அவர்களது நண்பரும் சாட்சியமளிக்க உள்ளனர்.
இந்த வழக்கு வரும் துபை நீதிமன்றத்தில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது, கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதியின் 18 மற்றும் 13 வயது மகள்கள்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளனர்.
ஹிரெண் ஆதியா (48) மற்றும் அவரது மனைவி விதி (40) ஆகியோர் அரேபியன் ராஞ்செஸ் பகுதியில் உள்ள தங்களது வீட்டில் கடந்த 2020 ஜூன் 17-ஆம் தேதி 26 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலாளியால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வீட்டுக்கு ஏற்கனவே பராமரிப்புப் பணிக்காக இந்த நபர் அழைக்கப்பட்டதாகவும், அப்போது வீட்டில் ஏராளமான பணம் இருப்பதைப் பார்த்து, அதைத் திருட திட்டமிட்டு, வீட்டுக்குள் நுழைந்து இந்த கொலைகளைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 18 வயது மகளுக்கும் கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டபோதும், குற்றவாளியை தப்பிக்க விடாமல் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்!

போதிய பேருந்து வசதி இல்லை! 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியவில்லை! - Nirmal Kumar | TVK

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


