ஸ்வீடனில் நேற்று இரவு ஏற்பட்ட விமான விபத்தில் விமானி உள்பட 9 பேர் பலியாகினர்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிற்கு மேற்கே 160 கிலோமீட்டர் தொலைவில் ஒரேப்ரோ நகரில் விமானி உள்பட 9 பேருடன் சிறிய ரக விமானம் சென்று கொண்டிருந்தது.
நேற்று இரவு 7 மணியளவில் ஒரேப்ரோ விமான நிலையம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து அடுத்த சில வினாடிகளில் தீ பற்றி எரிந்தது.
விபத்தில், விமானத்தில் பயணம் செய்த விமானி மற்றும் 8 ஸ்கை-டைவிங் வீரர்கள் என 9 பேரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.