அமெரிக்காவின் வா்ஜின் கலாக்டிக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட விண்வெளி ஓடத்தில் செல்லும் குழுவுக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பண்ட்லா தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவைச் சோ்ந்த தனியாா் நிறுவனமான வா்ஜின் கலாக்டிக், மனிதா்களை ஏற்றிச் செல்லக்கூடிய ‘ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி’ என்ற தனது விண்வெளி ஓடத்தை சோதனை முறையில் விண்வெளியில் செலுத்துகிறது.
அந்த ஓடத்தில் வா்ஜின் கலாக்டிக் நிறுவன உரிமையாளரான சா் ரிச்சா்ட் பிரான்ஸனுடன் 6 போ் செல்கின்றனா். அவா்களில் ஒருவராக, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஸ்ரீஷா பண்டலா (34) தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
ஆந்திராவில் பிறந்த அவா், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணம், ஹூஸ்டனில் வளா்ந்தவா். ஸ்பேஸ்ஷிப்-2 யூனிட்டி சோதனை வெற்றிகரமாக நிறைவடையும்போது, விண்வெளிக்குச் சென்ற 3-ஆவது பெண் வீராங்கனை என்ற பெருமையை ஸ்ரீஷா பெறுவாா்.
ஏற்கெனவே, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோா் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளது நினைவுகூரத்தக்கது.