கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

‘கரோனா தொற்று குறித்த விசாரணைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும்’: ஜெர்மனி

கரோனா தோற்றம் குறித்த ஆய்வுக்கு சீன அரசு முறையாக ஒத்துழைக்க வேண்டும் என ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் வலியுறுத்தியுள்ளார்.

News image
‘கரோனா குறித்த விசாரணைக்கு சீனா இணங்க வேண்டும்’: ஜெர்மனி
Updated On :16 ஜூலை 2021, 11:17 am

DIN

கரோனா தோற்றம் குறித்த ஆய்வுக்கு சீன அரசு முறையாக ஒத்துழைக்க வேண்டும் என ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனத்தின் வூஹான் மாகாணத்தில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் தொற்று பரவல் தீவிரமடைந்ததால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

உலகம் முழுவதும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து உலக நாடுகள் சீன அரசை விமர்சிக்கத் தொடங்கின. 

சீன அரசு திட்டமிட்டு கரோனா வைரஸை பரப்பியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வந்த நிலையில் சீனாவில் ஆய்வு மேற்கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுக் குழு அதனை மறுதலித்தது. 

இந்நிலையில் கரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்வதேச ஆய்வுக்குழுவை சீன அரசு தங்கள் நாட்டிற்குள் அனுமதித்து முறையாக ஒத்துழைக்க வேண்டும் என ஜெர்மனி அரசு வலியுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக பேசிய ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான், “கரோனா வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுக்கு சீன அரசின் ஒத்துழைப்பு அவசியம்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.