லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விஞ்ஞானிகளின் எச்சரிக்கையை புறக்கணித்த பிரிட்டன்

விஞ்ஞானிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரிட்டனில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2021, 7:30 am

DIN

விஞ்ஞானிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரிட்டனில் இன்று (திங்கள்கிழமை) அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்பட்டுள்ளது.

பிரிட்டனில் டெல்டா வகை கரோனா வேகமாக பரவி வருகிறது. பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விஞ்ஞானிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பிரிட்டனில் இன்று (திங்கட்கிழமை) அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்பட்டுள்ளது.

இரவுநேர விடுதிகளை மீண்டும் திறக்கவும், எந்த வித கட்டுப்பாடுகளின்றி திரையரங்கு உள்ளிட்டவற்றை திறக்கவும் நேற்று இரவு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, வீட்டிலிருந்து பணி செய்வது போன்ற அனைத்து கட்டுப்பாடுகளும் திரும்பபெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், "இப்போது, இதை செய்யவில்லையெனிலும், இலையுதிர் காலத்திலும் குளிர்காலத்திலும் திறந்துதான் ஆக வேண்டும். குளிர்காலம் என்பதால் அப்போது வைரஸ் பரவும் அபாயம் அதிகம் இருக்கும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை விமர்சித்துள்ள தொழிலாளர் கட்சி சுகாதார செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் அஷ்வொர்த், அரசு பொறுப்பற்று செயல்படுவதாக தெரிவித்துள்ளார். பிரிட்டனில் ஒரு நாளுக்கு 50,000 பேர் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகிவருகின்றனர். எனவே, தளர்வுகளை திரும்பபெறக்கூடாது என விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.