தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆப்கானிஸ்தான் : வான்வழித்  தாக்குதலில் 30 தலிபான்கள் பலி 

ஆப்கன் ராணுவம் இரண்டு பகுதிகளில்  மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்ததாகவும் 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும்  அந்நாட்டு பாதுகாப்புத்  துறை அமைச்சர் உறுதிசெய்திருக்கிறார்.

News image
ஆப்கானிஸ்தான் : வான்வழித்  தாக்குதலில் 30 தலிபான்கள் பலி 
Updated On :24 ஜூலை 2021, 9:38 am

DIN

காபூல் : ஆப்கன் ராணுவம் இரண்டு பகுதிகளில்  மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்ததாகவும் 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும்  அந்நாட்டு பாதுகாப்புத்  துறை அமைச்சர் உறுதிசெய்திருக்கிறார்.

வடக்கு ஜாவ்சான் பகுதியைச் சேர்ந்த முர்காப் மற்றும் ஹாசன் தப்பின் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைச்  சுற்றிவளைத்த ராணுவம் வான்வழித் தாக்குலைத் தொடர்ந்தது . இதில் 19 தீவிரவாதிகள் பலியானார்கள். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் தலிபான்கள் பயன்படுத்திய  ஆறு இருசக்கர வாகனங்கள் , இரண்டு பதுங்கு குழிகள் , பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் ராணுவத்தினர் அழித்தனர் . ஆப்கானிஸ்தான் படைகளுக்கும்  மற்றும் பொதுமக்களுக்கும்  எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த வான்வழித் தாக்குதல்கள் ஒரு வார காலமாக தொடர்ந்து வருவது  குறிப்பிடத்தக்கது.

மேலும் தலிபான்கள் நாட்டின்  419 மாவட்டத்தின்  மையப்பகுதிகளைக் கைப்பற்றியிருப்பதால் , ஆப்கன் பாதுகாப்புப் படைகள் காபூல்  உள்ளிட்ட முக்கிய மக்கள் மையங்களைப் பாதுகாக்க தங்கள் நிலைகளை பலப்படுத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.