பாகிஸ்தானில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினமும் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 4,000 ஆக உயர்ந்தது .
தேசிய மருத்துவ ஆய்வுத் துறை அளித்த தகவலில் , கரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் கடந்த இரண்டு நாட்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 4000-த்தைத் தாண்டி வருவதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,497 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 35.7 லட்சம் கரோனா பாதிப்புகளும் சிந்துவில் 37.7 லட்சமாகவும் இருக்கிறது.
இதுவரை பாகிஸ்தானில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,209 எனவும் 35.8 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.