மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 19 பேர் பலி 

நைஜீரியா நாட்டில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலி எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

News image

நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 19 பேர் பலி 

Updated On :30 ஜூலை 2021, 10:24 am

நைஜீரியா நாட்டில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலி எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் " பாணிபாங்கு மாவட்டத்தைச் சேர்ந்த தேடேகோகு கிராமத்தில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியானார்கள். இருவர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் மாயம் எனக் கூறியதோடு , சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ' எனத் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் கடந்த சில வருடங்களாக பொதுமக்களின் மீதும் ராணுவத்தினரின் மீதும் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த வருடத் தொடக்கத்திலிருந்து இதுவரை 300 பேர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.