இலங்கையில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடக்கம்: ஆனால்..
இலங்கையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று சர்வதேச விமானப் போக்குவரத்துத் தொடங்கப்பட்டுள்ளது.


கொழும்பு: இலங்கையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கம் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று சர்வதேச விமானப் போக்குவரத்துத் தொடங்கப்பட்டுள்ளது.
கத்தாரிலிருந்து 53 பயணிகளுடன் முதல் விமானம் இலங்கையில் தரையிறங்கியது.
ஆனால் அதே வேளையில், கடந்த 14 நாள்களில் இந்தியா மற்றும் வியட்நாம் சென்று வந்தவர்கள் யாரும் கொழும்பு விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியச் சேவைகளுக்கு மட்டும் இயக்கப்பட்டு வரும் உள்நாட்டு விமான சேவையிக்கான கட்டுப்பாடுகள் ஜூன் 7 முதல் தளர்த்தப்படுகிறது.
நள்ளிரவு முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ஒரு விமானத்தில் 75 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வெளிநாட்டினரோ, இலங்கையைச் சேர்ந்தவர்களோ, கடந்த 14 நாள்களில் இந்தியா அல்லது வியட்நாமில் தங்கியிருந்தாலோ, தங்களது விமானப் பயணத்துக்காக இந்நாடுகளில் தரையிறங்கியவர்களாக இருந்தாலோ அவர்கள் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் விமானப் போக்குவரத்து அதிகாரி ஜெயகாந்தா அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...