காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஆப்கனில் ராணுவத் தாக்குதல்: 258 தலிபான்கள் சுட்டுக்கொலை

ஆப்கனில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 258 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

News image
(கோப்புப்படம்)
Updated On :18 ஜூன் 2021, 3:03 pm

DIN

ஆப்கனில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 258 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நங்கர்ஹார், லக்மான், ஃபரியாப், ஹெல்மண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தலிபான் அமைப்பினர் எதிரான தாக்குதலில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 258 தலிபான்கள் கொல்லப்பட்டனர். மேலும் 156 பேர் காயமடைந்தனர்.

அதேபோல் வியாழக்கிழமை, சாபுல் மாகாணத்தின் ஷா ஜாய் மற்றும் ஷின்காய் மாவட்டங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 19 தலிபான் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

சமீபகாலங்களில் தலிபான் அமைப்பினருக்கும், ஆப்கன் ராணுவத்தினருக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.