டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போலி செய்தி பரப்பியதாக எகிப்து மாணவிக்கு 4 ஆண்டுகள் சிறை

எகிப்து நாட்டில் போலி செய்தி பரப்பியதாக பல்கலைக் கழக மாணவி ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
போலிச் செய்தி பரப்பியதாக எகிப்து மாணவிக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை
Updated On :28 ஜனவரி 2024, 3:28 am

DIN

எகிப்து நாட்டில் போலி செய்தி பரப்பியதாக பல்கலைக் கழக மாணவி ஒருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியன்னாவில் உள்ள மத்திய ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவியாக பயின்று வருபவர் அகமது சமீர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது குடும்பத்தினரைக் காண எகிப்து நாட்டிற்கு திரும்பியுள்ளார். 

இந்நிலையில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது மற்றும் போலி செய்திகளைப் பரப்பியது உள்ளிட்ட காரணங்களுக்காக எகிப்து காவல்துறை கைது செய்தது. 

அவர் மீதான விசாரணையைத் தொடர்ந்து அவர் எகிப்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமீருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

எனினும் இந்த உத்தரவிற்கு பல்வேறு மனித உரிமை குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாட்டில் அரசியல் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் அடிக்கடி சுமத்தப்பட்டு பழிவாங்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.